விளக்கு உவமை

மாற்கு நற்செய்தியில் விளக்கு உவமைக்கு அடுத்துவரும் வளரும் விதை உவமையும் சேர்த்து ஒரே படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது

விளக்கு உவமை என்பது இயேசுவின் உவமைகளுள் ஒன்றாகும். புதிய ஏற்பாட்டின் மூன்று நற்செய்தி நூல்களில் இடம்பெறுகின்றது. மத்தேயு 5:14–15, மாற்கு 4:21–25 மற்றும் லூக்கா 8:16–18இல் இடம் பெறும் இவ்வுவமை, இந்த நூல்களில் விவரிப்பில் மிக சிறு வேறுபாட்டையே கொண்டுள்ளது. மாற்கு நற்செய்தியில் இவ்வுவமை உப்பும் ஒளியும் சொற்பொழிவுக்கு பின் வருகின்றது.

இயேசுவின் இந்த உவமையின் அடிப்படையில் "to hide one's light under a bushel" என்னும் ஆங்கில பழமொழியும் உண்டு.[1]

உவமையின் விவரிப்பு[தொகு]

லூக்கா நற்செய்தியில், பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் கூறியது:

'எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர். வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை. ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும்'

லூக்கா 11:33–36, பொது மொழிபெயர்ப்பு

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilson, F. P. ed. (1970). The Oxford Dictionary of Proverbs. Third Edition. Oxford University Press. p.371. "Hide one's light (candle) under a bushel, To."
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளக்கு_உவமை&oldid=1471779" இலிருந்து மீள்விக்கப்பட்டது